PDF chapter test TRY NOW

அடர்த்தியின் கருத்தைப் புரிந்து கொள்ள ஒரு எளிய செயல்பாட்டைச் செய்வோம்..
  • ஒரே மாதிரியான இரண்டு குடுவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஒரு குடுவையில் \(250\) செமீ3 அளவு நீரையும் மற்றொன்றில் அதே அளவு மண்ணெண்ணையையும் நிரப்பவும்.
  • இரு குடுவைகளின் எடையை தராசில் அளந்து, மதிப்புகளைக் குறித்துக்கொள்ளவும்.
1.png2.png
மண்ணெண்ணெய் குடுவை மற்றும் நீர் குடுவை
 
நீரினால் நிரப்பப்பட்ட குடுவையின் எடை அதிகமாக உள்ளதைக் காணலாம்.
 
ஏன்?
 
நீர் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் ஓரலகு பருமனுக்கான நிறையைக் கண்டறிந்தால் இதற்கான விடையை அறியலாம்.
 
இதை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு குடுவையின் நிறையை \(80\) கி எனக் கொள்வோம்.
 
நீர் நிரப்பப்பட்ட குடுவையின் நிறை \(330\) கி மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட குடுவையின் நிறை \(280\) கி இருக்குமெனில், நீரின் நிறை மட்டும் \(250\) கி மற்றும் மண்ணெண்ணையின் நிறை மட்டும் \(200\) கி ஆகும்.
 
இங்கு, ஓரலகு பருமனுக்கானநீரின் நிறை =250கி250செமீ3=1கி1செமீ3
 
இதேபோல்,
 
இங்கு,ஓரலகு பருமனுக்கானமண்ணெண்ணையின் நிறை=200கி250செமீ3=0.8கிசெமீ3
 
இதன் முடிவு, நீரின் அடர்த்தி மற்றும் மண்ணெண்ணையின் அடர்த்தி முறையே \(1\) கிசெமீ3 மற்றும் \(0.8\) கிசெமீ3 என்பதாகும்.

எனவே,
ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம்.
அடர்த்தியின் \(SI\) அலகு கிலோகிராம்மீட்டர்3 அல்லது கிகிமீ்3. மேலும் கிசெமீ3 எனவும் இதனைக் குறிப்பிடலாம்.
அடர்த்திக்கான குறியீடு ரோ (\(\rho\)) எனப்படுகிறது.